கிருஷ்ணர் காளிங்கனைத் தண்டித்தல்
கிருஷ்ணர் காளிங்கனைத் தண்டித்தல் காளிங்கனின் கொடிய விஷத்தினால் கெட்டுப் போயிருந்த யமுனை நதியினை மீண்டும் தூய்மை பெறச் செய்வதற்காக பகவான் கிருஷ்ணர் கரையருகே நின்றிருந்த “கதம்ப” மரத்தின் மீது ஏறி யமுனை நதியினுள் குதித்தார். பிறகு அவர் ஒரு மதங் கொண்ட யானையைப் போல் யமுனை நதியில் விளையாடி மகிழ்ந்தார். கிருஷ்ணர் அத்துமீறி தனது எல்லைக்குள் நுழைந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத காளிங்கன் மிகுந்த சீற்றத்துடன் பகவானிடம் வந்து அவரது மார்பில் கொத்தினான். இதனைக் கண்ட கிருஷ்ணரின் நண்பர்கள் அதிர்ச்சியினால் மூர்ச்சையடைந்து நிலத்தில் வீழ்ந்தனர். அச்சமயம் விரஜத்தில், நிலநடுக்கம், விண்மீன்கள் உதிர்தல், பல்வேறு உயிர்களின் இடதுபுறம் துடித்தல் போன்ற தீக்குறிகள் தோன்றின. விரஜத்திலிருந்தோர் “பலராமரின் துணையின்றி கிருஷ்ணன் இன்று காட்டிற்குச் சென்றிருக்கிறான், அதனால் அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லையே” என்று மனம் வருந்தினர். இவ்வாறு வருந்திய அவர்கள் கிருஷ்ணரின் காலடித் தடத்தினைப் பின்பற்றி யமுனை நதிக்கரைக்கு வந்தனர். நதியினை ஒட்டியிருந்த குளத்தில் அவர்களது உயிருக்கு உயிரான பகவான் கிருஷ்ணர் கருநாகத்தி...
Comments
Post a Comment